06 மே 2010

யாழ்ப்பணத்தில் மீண்டும் சோதனைச்சாவடிகள்.






யாழ்ப்பாண நகர நுழைவாயில்களில் மீண்டும் சோதனை நடவடிக்கைள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் சோதனைக்குப் பின்னரே நகருக்குள் அனுமதிக்கப்படுவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

யுத்தம் முடிவடைந்த பின் நிலவிய சுமூகமான நிலையை அடுத்து யாழ்ப்பாண நுழைவாயில்களில் இருந்த சோதனைச் சாவடிகள் அகற்றப்பட்டிருந்தன. தற்போது யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் கடத்தல், கப்பம் கோரல் போன்ற செயல்களையடுத்து, இராணுவத்தினர் மீண்டும் சோதனைச் சாவடிகளை அமைத்துள்ளனர்.

யாழ். நகர நுழைவாயில்களான தட்டதெருச் சந்தி, ஓட்டுமடச் சந்தி, இலுப்பையடிச் சந்தி போன்ற இடங்களிலேயே மீண்டும் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இவற்றைவிட, யாழ். நகரின் மத்தியில், ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக