16 மே 2010

அழுவதற்கான நாள் அல்ல,நாம் நிமிர்வதற்கான நாள்!


முள்ளிவாய்க்கால் முடிவல்ல என்கிறார் பலர்,

நான் சொல்கிறேன் முள்ளிவாய்க்கால்தான் முடிவு,

எம் துன்பங்களின் முடிவாக முள்ளிவாய்க்கால்இருக்கட்டும்,

துன்பங்களின் எல்லையாக முள்ளிவாய்க்கால்இருக்கட்டும்,

அங்கே முடிந்துபோனது எமது இன்னல்களாக இருக்கட்டும்,

தமிழனே எழுந்து கொள்!

மாண்டுபோன எம் உறவுகள் மீதுசத்தியம் செய்!

விடுதலை பெறுவோம் எனசத்தியம் செய்!

உனக்காக இல்லாவிட்டாலும்,

நீ எம்மைதொடர்வாய் என்ற நம்பிக்கையுடன்

வீர காவியமான அந்தமறவர்களுக்காகவெனினும்

தாயக விடுதலைக்காய்உறுதி கொள்!

சிங்களன் புரிந்த கொடூரம்தனை நினைவில் கொள்!

உன் கண்கள்தனில் கோப அனல் தெறிக்கட்டும்,

அதுஇனவாத சிங்களத்தையே எரிக்கட்டும்,

எம் தமிழர் கல்லறை எழுந்து நாளை சிரிக்கட்டும்,

இது அழுவதற்கான நாள் அல்ல,

நாம் நிமிர்வதற்கான நாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக