16 மே 2010

சுப,வீரபாண்டியன் ஆடும் கேலிக்கூத்து!



தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதி அம்மாளுக்கு தமிழகத்தில் சிகிச்சை வழங்கப்பட்டு விட்டது போல சு.ப. வீரபாண்டியன் பதாகைகளை அடித்து ஒட்டியுள்ளார். அதில் தமிழக அரசுச் செலவில் மருத்துவ உதவி வழங்கப்பட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை வேதனையும் வேடிக்கையுமான விடயமும் கூட. தள்ளாடும் வயதில் சிகிச்சைக்காக வந்த பார்வதி அம்மாளை திருப்பி அனுப்பி, பின்னர் அவர் வரலாம், ஆனால் அரசியல் தலைவர்களை சந்திக்கக்கூடாது என பல நிபந்தனைகளைப் போட்டது தமிழக அரசு.
தற்போது பார்வதி அம்மாளை வைத்து பிழைப்புவாதம் நடாத்துகிறார் சு.ப.வீராபாண்டியன். தமிழீழ உணர்வாளர்போல பல காலம் நடித்து, பின்னர் விலைபோய், தற்போது கருணாநிதியின் அடிவருடியாகச் செயல்படும், மிகக் கேவலமான மனிதர்களுக்குள் சு.ப.வீரபாண்டியனும் ஒருவர். தமிழ் தேசியத்தை, விலைபேசினார் பொறுத்துக்கொண்டோம், தமிழர் மானத்தை கருணாநிதியிடம் அடகு வைத்தார் பொறுத்துக்கொண்டோம், தற்போது தேசிய தலைவரின் தாயை வைத்து பிழைப்பு நடத்தப் பார்க்கிறார். இவர்போன்ற தெருப்பொறுக்கி அரசியல்வாதிகள் இனம்காணப்படவேண்டும்.
இந்த போஸ்டரை வாசிக்கும் பாமரத் தமிழக மக்கள், தேசிய தலைவரின் தாயார் ஏதோ தமிழகம் வந்து அரசு செலவில் சிகிச்சை பெற்றுச் சென்றுவிட்டதாக நினைப்பார்கள். இது போன்ற மாயையில், தமிழக மக்களை கலைஞர் அரசு போட்டு பூட்டிவைத்துள்ளது. நடக்காத பல விடயங்களை நடந்ததாகக் கூறுகிறது. இப்போது அரசியல் நடாத்துவது யார்?
சுப,வீரபாண்டியனை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக