01 மே 2010

நாடு கடந்த தமிழீழ அரசுக்கான நடவடிக்கையை முறியடிக்கவேண்டும்-கோத்தபாய.

விடுதலைப் புலிகளை ஒரு ஆண்டுக்கு முன்னர் அழித்து விட்டதாகக் கூறும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷ, தமது அடுத்த கட்ட நடவடிக்கை சர்வதேச மட்டத்திலுள்ள வலையமைப்பை அழிப்பதே எனத் தெரிவித்தார். ஆனையிறவில் அமைக்கப்பட்டுள்ள படை வீரர்களுக்கான நினைவுத் தூபி திறப்பு வைபவத்தில் கலந்துகொண்ட பின்னர் நடந்த ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்வாறு அவர் கூறினார். மேலும், புலம்பெயர்ந்துள்ள மக்களுக்கு இலங்கை தொடர்பாகவும் தமிழ் மக்கள் தொடர்பாகவும், தவறான தகவல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதேபோல நாடு கடந்த தமிழீழ அரசு ஒன்றை அமைப்பதற்கும் வெளிநாட்டிலுள்ளவர்கள் முயற்சி செய்கின்றனர், இவற்றையெல்லாம் செய்துவரும் சிறிய குழுவை இல்லாதொழிக்க வேண்டும். இதற்கான கடப்பாடு இலங்கை வெளிநாட்டு அமைச்சுக்கு உள்ளது என கோத்தபாய கூறினார்.

ஆரம்ப காலத்தில் சிறு சிறு குழுக்களாகத் தொடங்கியே பின்னர் புலிகள் பெருமளவில் பெருகினர். எனவே சிறு குழுக்கள் உருவாகுவதைக்கூட நாங்கள் அனுமதிக்கப்போவதில்லையாம் என்கிறார் கோத்தபாய. நாடு கடந்த தமிழீழ அரசின் தேர்தல் நடக்கவுள்ள இக்காலகட்டத்தில் கோத்தபாய இவ்வாறு தெரிவித்திருப்பதானது, நாடு கடந்த அரசு மூலம் தமக்கு ஏற்படவுள்ள அழுத்தங்களை அவர் உணர்ந்துள்ளமையைக் காண்பிக்கிறது.
நன்றி:அதிர்வு இணையம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக